திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் என்றைக்குமே மக்களுக்கு நல்ல காலம் பிறக்காது: சீமான் ஆவேசம்….!! 

Estimated read time 0 min read

நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாகச் சாடினார்.

கடந்த 65 ஆண்டுகளாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்தும், ஒரு மழை பெய்தால் கூடத் தலைநகர் சென்னையில் மழைநீரும் கழிவுநீரும் தேங்காமல் செல்வதற்கு உருப்படியான எந்தத் திட்டத்தையும் இவர்கள் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். இத்தனை ஆண்டுகளில் அடிப்படை வசதிகளைக் கூடச் சரி செய்யாதது இந்த ஆட்சியாளர்களின் தோல்வி என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.

மேலும், தனது பாணியில் கிண்டலாகப் பேசிய அவர், முன்னெல்லாம் தெருக்களில் ‘நல்ல காலம் பிறக்குது’ என்று வாக்கு சொல்லும் குடுகுடுப்பைக்காரர்கள் வருவார்கள், ஆனால் இப்போது அவர்கள் வருவதே இல்லை என்றார். ஏனென்றால், இந்தத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் என்றைக்குமே மக்களுக்கு நல்ல காலம் பிறக்காது என்பது அந்த குடுகுடுப்பைக்காரர்களுக்கே தெரிந்துவிட்டது என்று அவர் எள்ளி நகையாடினார்.

சீமானின் இந்த நக்கல் கலந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author