கேரளாவின் வயநாடு நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 344ஐ எட்டியுள்ளது. கேரள அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதோடு, மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் ஆழமான தேடுதல் ரேடார்களை அனுப்புமாறு கேரள அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவில் இருந்து ஒரு Xaver ரேடார் மற்றும் டெல்லியில் உள்ள திரங்கா மலை மீட்பு குழுவின் நான்கு Reeco ரேடார்களும், மத்திய அரசின் உத்தரவின்பேரில் விமானப்படை விமானத்தில் வயநாட்டிற்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) அனுப்பப்பட்டன.
ஐந்தாவது நாளாக தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னும் 200 பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.