பள்ளிகளில் சொற்பொழிவு; முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு  

அண்மையில், அனைத்துலக முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தமிழகத்தில் சில பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி குறித்த உறுதிமொழிகள் தொடர்பான சர்ச்சைகள் தமிழ்நாட்டில் சர்ச்சையை தூண்டியது.
அவை ஓயும் முன்னரே, அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது என புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
சென்னையின் அசோக் நகரில் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒரே நேரத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றன.
‘தன்னம்பிக்கை’ என்ற தலைப்பில், மகாவிஷ்ணு என்பவர் ‘தன்னை உணர்ந்த தருணங்கள்’ என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றியுள்ளார்.
அவர் மாணவர்களுக்கு யோக தீட்சை வழங்குவதும், மறுபிறவி குறித்த கருத்துக்களும் கூறியதாகக் கூறப்படுகிறது, மேலும் இது கடந்த கால பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டது என்ற கூறியதும் விவாதங்களை தூண்டியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author