பாலக்காட்டில் ரயில் மோதியதில் 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு  

பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற கேரள எக்ஸ்பிரஸ், ஷோரனூர் ரயில் நிலையம் அருகே, ரயில் நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷோரனூர் பாலம் அருகே உள்ள ரயில் பாதையில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்த ​​நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோதிய வேகத்தில் துப்புரவு பணியாளர்கள் தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் சுமார் பிற்பகல் 3.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

You May Also Like

More From Author