டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல்

இன்று காலை டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை.
எனினும் மாணவர்கள் அனைவரும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பீதியடைந்த பெற்றோர்கள், பள்ளிகளுக்கு வெளியே குவிந்ததால், இது குறித்து உள்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தின் படி, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் ஒரு புரளி எனத்தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் முழுமையான சோதனை நடத்தியதாகவும், எதுவும் கிடைக்கவில்லை என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
தில்லி காவல்துறையின் (குற்றம்) சிறப்பு சிபி ரவீந்தர் யாதவ் கூறுகையில், செவ்வாயன்று சில மருத்துவமனைகளுக்கும் இதுபோன்ற மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author