இஸ்ரேல் மீது ‘நேரடி’ தாக்குதல் நடத்த ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு  

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் மீது “நேரடி தாக்குதல்” நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, “போர் விரிவடைந்து இஸ்ரேல் அல்லது அமெரிக்கா ஈரானைத் தாக்கினால்” தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் இரண்டையும் தயார் செய்யுமாறு இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் ஈரானிய இராணுவத்தின் தளபதிகளுக்கு கமேனி உத்தரவிட்டார்.

You May Also Like

More From Author