சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் டிசம்பர் 18ஆம் நாள் பிற்பகல் சிறப்பு விமானம் மூலம் மக்கெளவைச் சென்றடைந்தார்.
20ஆம் நாள் நடைபெறவுள்ள மக்கெள தாய்நாட்டுடன் இணைந்த 25ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டத்திலும், மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது அரசு பதவி ஏற்கும் விழாவிலும் அவர் கலந்து கொண்டு, மக்கெளவில் ஆய்வு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.