சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணி அலுவலகத்தின் தகவலின்படி, மே 22ம் நாள் 16:49 மணிக்கு ஷென்ச்சோ-20 விண்வெளி வீரர் குழுவின் வீரர்களான ச்சேன் டுங், ச்சே ச்சொங் ரேய், வாங் ஜேய் ஆகியோர், தரையிலுள்ள அறிவியல் ஆய்வாளர்களின் ஆதரவுடன், நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொண்டு, மைய கலத்தின் வெளியேற்ற அறையிலிருந்து வெளியே சென்றனர். விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டு மற்றும் வளர்ச்சி கட்டத்தில், விண்வெளி வீரர்கள், தியேன் ஹே மைய கலத்தின் வெளியேற்ற அறையிலிருந்து வெளியே செல்வது இது முதன்முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஷென்ச்சோ-20 விண்வெளி வீரர்கள் முதன்முறை விண்கலத்தின் வெளியே வருகை
Estimated read time
1 min read
