திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் வழிபட பல்வேறு தரிசன டோக்கன்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு போன்றவை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான டிசம்பர் மாத ஒதுக்கீடு இன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான ‘எலக்ட்ரானிக் டிப்’ (குலுக்கல்) பதிவு 20-ந் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.
அங்கப்பிரதட்சண டோக்கன்களும் இந்த மாதம் முதல் ஆன்லைனில் ‘எலக்ட்ரானிக் டிப்’ மூலம் வழங்கப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் 20 முதல் 22-ந் தேதி மதியம் 12 மணி வரை அதற்கான தொகையை செலுத்தினால் ‘லக்கி டிப்’பில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. உற்சவ சேவைகள் மற்றும் அவற்றுக்கான தரிசன டோக்கன் ஒதுக்கீடு 22-ந் தேதி மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்
மேலும் டிசம்பர் மாத ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் ஒதுக்கீடு 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஏழுமலையானை தரிசிக்க சிறப்பு இலவச டோக்கன்கள் 23-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் (ரூ.300) ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
திருமலை, திருப்பதியில் உள்ள அறைகள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே பக்தர்கள் ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகள் போன்றவற்றை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை தரமணி வளாகத்தில் 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்காவின் வால்கிரீன்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. [மேலும்…]
பா.ஜ.க-வின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலராக இருப்பவர் திவ்யா சேஷாத்ரி. கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இவர் 2024-ஆம் ஆண்டு முதல் திருச்சியில் வசித்து வருகிறார். [மேலும்…]
சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், சீனாவில் புதிதாக அமைக்கப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 42 [மேலும்…]
‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக கரு. நாகராஜனை நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். [மேலும்…]
ரூ.50 கோடி மதிப்புள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் நிலத்தில் திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமானதாகக் [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு [மேலும்…]
குதிரை இல்லாமல் குதிரை வண்டி ஓடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? சீனாவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் [மேலும்…]
23ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சி மற்றும் சீன-ஆசியான் வணிக முதலீட்டு உச்சிமாநாடு செப்டம்பர் 17ம் நாள் சீனாவின் குவாங்சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் [மேலும்…]