திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் வழிபட பல்வேறு தரிசன டோக்கன்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு போன்றவை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான டிசம்பர் மாத ஒதுக்கீடு இன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான ‘எலக்ட்ரானிக் டிப்’ (குலுக்கல்) பதிவு 20-ந் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.
அங்கப்பிரதட்சண டோக்கன்களும் இந்த மாதம் முதல் ஆன்லைனில் ‘எலக்ட்ரானிக் டிப்’ மூலம் வழங்கப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் 20 முதல் 22-ந் தேதி மதியம் 12 மணி வரை அதற்கான தொகையை செலுத்தினால் ‘லக்கி டிப்’பில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. உற்சவ சேவைகள் மற்றும் அவற்றுக்கான தரிசன டோக்கன் ஒதுக்கீடு 22-ந் தேதி மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்
மேலும் டிசம்பர் மாத ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் ஒதுக்கீடு 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஏழுமலையானை தரிசிக்க சிறப்பு இலவச டோக்கன்கள் 23-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் (ரூ.300) ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
திருமலை, திருப்பதியில் உள்ள அறைகள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே பக்தர்கள் ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகள் போன்றவற்றை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், 13ஆம் நாள், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாய்வு தொடர்புடைய தகவல்கள் குறித்து செய்தியாளர்களுக்குப் [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அம்மைச்சருமான வாங்யீ மார்ச் 12ம் நாள் எகிப்து வெளியுறவு அமைச்சர் அப்டெல்லாடியுடன் [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அம்மைச்சருமான வாங்யீ மார்ச் 12ம் நாள் அழைப்பை ஏற்று, கியூபா கம்யூனிஸ்ட் [மேலும்…]
சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் அண்மையில் இனிதே நிறைவடைந்தன. நடப்பு இரு கூட்டத்தொடர்கள், சீனாவின் எதிர்காலச் செயல் பணித்திட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு, பல்வேறு நாடுகள் கூட்டுச் [மேலும்…]
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை [மேலும்…]
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. [மேலும்…]
போர் சூழலுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் 14-வது நாளாக [மேலும்…]