பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைத்த மனு பாக்கருக்கு பிரதமர் வாழ்த்து  

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்த ஹரியானாவைச் சேர்ந்த 22 வயதான மனு பாக்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்.
அபினவ் பிந்த்ரா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், விஜய் குமார் மற்றும் ககன் நரங் ஆகியோருக்குப் பிறகு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் அவருக்கு கிடைத்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author