சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
ஏடன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலுக்கு உதவி: இந்தியாவுக்கு குவியும் பாராட்டு!
ஏடன் வளைகுடா பகுதியில் ஏவுகணைத் தாக்குதலில் தீப்பிடித்த பிரிட்டன் நாட்டின் எண்ணெய் கப்பலுக்கு உதவியதற்காக இந்தியாவுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. [மேலும்…]
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.69 அடியாக உள்ளது. மேட்டூர் [மேலும்…]
வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான 3ஆவது ஒத்திகை
வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான 3ஆவது ஒத்திகையைச் சீன ஊடகக் குழுமம் ஜனவரி 28ஆம் நாள் வெற்றிகரமாக நடத்தியது. இவ்வாண்டின் வசந்தவிழா கலைநிகழ்ச்சியானது, சீனாவின் சிறந்த [மேலும்…]
மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்!
உத்தரமேரூர் மேற்கு ஒன்றியத்தில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் மேற்கு ஒன்றியங்களில், அதிமுக, திமுக, [மேலும்…]
தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது!
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு 83,000 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் [மேலும்…]
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என அழைக்கப்படும் “ஐகான் ஆப் தி சீஸ் “
உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலான ராயல் கரீபியனின் “ஐகான் ஆஃப் தி சீஸ்”, தனது முதல் பயணத்தை ஜனவரி 27 அன்று சூரிய அஸ்தமனத்திற்கு [மேலும்…]
உலகில் சீன இயக்கு ஆற்றல் மின்கலங்களின் செல்வாக்கு
சீனா மீதான ஏற்றுமதி கட்டுப்பாட்டை அமெரிக்க அரசு வலுப்படுத்தி வருவதால், சீனாவின் மின்கலப் பொருட்களை அதிகமாக சார்ந்திருக்கும் தென் கொரிய வாகன தொழில் நிறுவனங்களுக்கு [மேலும்…]
பின்லந்தில் இன்று அதிபர் தேர்தல்!
பின்லந்தில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் பிற்பகல் 3 மணிக்கு வாக்களிக்கத் தொடங்கினர். ஐரோப்பிய தேசமான பின்லாந்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் [மேலும்…]
பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!
கோவை வெள்ளலூர் பகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நூற்றுக்கணக்கானோர் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். இது குறித்து தனது எக்ஸ் [மேலும்…]
வசந்த விழா கலை நிகழ்ச்சியின் பரவல் நடவடிக்கை நியூயார்க்கில் நடைபெற்றது
வசந்த விழா கலை நிகழ்ச்சியின் பரவல் நடவடிக்கை நியூயார்க்கில் நடைபெற்றது சீன ஊடக குழுமத்தால் நடத்தப்பட்ட வசந்த விழா கலை நிகழ்ச்சியின் பரவல் நடவடிக்கை [மேலும்…]




