சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
வசந்தவிழா கலைநிகழ்ச்சியுடன் சீனப் புத்தாண்டு வரவேற்பு
பிப்ரவரி 9ஆம் நாள் சீனச் சந்திர நாட்காட்டியின்படி டிராகன் ஆண்டின் புத்தாண்டுக்கு முந்தைய இரவாகும். இந்நாளில் இரவு 8 மணிக்கு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த வசந்த விழா கலை [மேலும்…]
மதுரையில் அரசினர் மீனாட்சி கல்லூரி என்.சி.சி. மாணவியருக்குபாராட்டு விழா
… மதுரையில் என்.சி.சி. மாணவியர் களான மேனகா மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை (ஆங்கில வழி) ,லத்திகா மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை ஆகிய [மேலும்…]
நியூயார்கில் வசந்த விழா கலை நிகழ்ச்சியின் பரவல் நிகழ்வு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிப்ரவரி 8ஆம் நாள் நடைபெற்ற தேசிய ஹாக்கி போட்டியில், வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நிகழ்வை சீன ஊடகக் [மேலும்…]
ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் மீண்டும் கசிவு
7ஆம் நாள் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் அணுக் கழிவு நீர் கசிவு விபத்து ஏற்பட்டது. அது மனிதர்களால் ஏற்பட்ட பிழையாக இருக்க கூடும் [மேலும்…]
தை அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!
தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் கூடியுள்ள பொதுமக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அமாவாசை என்பது முன்னோர்களை வணங்கி அவர்களுக்கு [மேலும்…]
சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மற்றும் அரசு விழா கடலூர் மாவட்ட [மேலும்…]
200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சீன வசந்த விழா கலைநிகழ்ச்சி ஒளிபரப்பு
பிப்ரவரி 9ஆம் நாள் இரவு 8மணிக்கு, சீன ஊடகக் குழுமத்தின் 2024ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி உலக ரசிகர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கின்னஸ் [மேலும்…]
ஷிச்சின்பிங்-புதின் தொலைபேசி தொடர்பு
சீனப் புத்தாண்டை முன்னிட்டு சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ரஷிய அரசுத்தலைவர் புதினுடன் பிப்ரவரி 8ஆம் நாள் மாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது [மேலும்…]
பலுசிஸ்தானில் தேர்தல் அலுவலகங்கள் மீது இரட்டை குண்டு தாக்குதல்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்சித் தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புகளில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 42க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டில் [மேலும்…]
விவசாயிகளைக் கைது செய்யும் முடிவை, உடனடியாகக் கைவிட வேண்டும்! – அண்ணாமலை
நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய, திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் [மேலும்…]




