மே 2025-ல் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததையடுத்து, பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து [மேலும்…]
அமெரிக்கா – ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் நடத்தத் திட்டம்
சமீபத்தில் நிலவி வந்த பிராந்திய மோதல்களை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையேயான அடுத்தகட்ட [மேலும்…]
மக்களே உஷார்..! ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 07-07-2026 முதல் 08-07-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த [மேலும்…]
மும்பையில் தொடரும் கனமழை: இன்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை; ரயில்கள் ரத்து
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் அதிதீவிர பருவமழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் நகரில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
“தனியார் பள்ளிக்கு மட்டும் தான் அமைச்சரா?”.. அரசுப் பள்ளிகளின் அவல நிலையைப் பட்டியலிட்டுச் சீமான் அதிரடி தாக்கு..!!!
தனியார் பள்ளிகள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உருக்கமாகப் பேசியதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் (X) தளத்தில் [மேலும்…]
பலவீனமான பருவமழை இந்தியாவின் பணவீக்கத்தை 5% ஆக உயர்த்தக்கூடும்: ஆய்வறிக்கை
இந்தியாவில் பலவீனமான பருவமழை பணவீக்கத்தை அதிகரிக்கவும், கிராமப்புற தேவையை பலவீனப்படுத்தவும், நிதி இருப்புநிலைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தவும் கூடும். எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் அறிக்கை [மேலும்…]
தோழர் புருஷோத்தமனின் இழப்பு பத்திரிகை உலகிற்கே பேரிழப்பு: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் புகழாரம்
சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
இலங்கை சிறையில் நடந்த வன்முறை மோதல்களில் 25 பேர் கொல்லப்பட்டனர்
இலங்கையில் உள்ள ஒரு சிறையில் நடந்த மோதல்களில், ஐந்து சிறை அதிகாரிகள் மற்றும் 20 கைதிகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். இந்த [மேலும்…]
“உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் பரிசீலனை செய்க!”.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்-அமைச்சர் விஜய்..!
தமிழகத்தின் முதல்-அமைச்சர் விஜய், மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக சாதனைக்கு வெளிநாட்டு பிரமுகர்கள் பாராட்டு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105ஆம் ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒளிவீசும் பயணத்தை [மேலும்…]
சிறப்பு மக்னோலியா விருதை பெற்ற பணத்தின் அற்புதமான கதை என்ற ஆவணப்படம்
31வது ஷாங்காய் தொலைக்காட்சி விழாவின் மக்னோலியா விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. சீன ஊடக குழுமம் வெளியிட்ட பணத்தின் அற்புதமான கதை என்ற ஆவணப்படம் ஏற்பாட்டுக் [மேலும்…]




