சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
இந்தியா கூட்டணி 2004 முதல் 2014 வரை வேறு பெயரில் இருந்தது – அண்ணாமலை
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பலவற்றில் இதுவும் [மேலும்…]
காணும் பொங்கல் – சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காணும் பொங்கல் தினமான நாளை கூட்டம் அலைமோதும் [மேலும்…]
பொங்கலும், காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்!
தமிழர்களின் முக்கியமான அடையாளம் எது என்றால் அது பொங்கல் பண்டிகை. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமாக, இதயங்களை பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து அட்டைகள். யானை வரும் பின்னே மணியோசை [மேலும்…]
விபத்தில் சிக்கிய விமானம்… தேடுதல் பணியில் மீட்புக் குழு
கலிபோர்னியாவின் ஹாப் மூன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு தெற்கு பகுதியில் [மேலும்…]
இழந்த அடையாளங்களை மீட்கும் பொங்கல்!
கடந்த காலங்களில் நமது நாட்டில் பிரதான தொழிலாக இருந்து வந்தது உழவும், நெசவும் தான். ஆனால், நாகரீகம் வளர வளரவும், இந்த இரண்டு தொழில்களிலும் லாபம் குறைவு [மேலும்…]
அயோத்தி கோவில் உருவான வரலாறு!
அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஸ்ரீராமர் கோவில் [மேலும்…]
வரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்; 23ம் தேதி முதல் போட்டிகள் நடக்கிறது
வரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்; 23ம் தேதி முதல் போட்டிகள் நடக்கிறது மதுரை: பழுதடைந்த வாடிவாசலும், இடிந்து விழும் காட்சியறையும் இனி பழையதாகிவிடும். மதுரையில் [மேலும்…]
ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள் : களையிழந்த கிராமங்கள்!
தமிழக கிராமங்களில் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு, கட்டுப்பாடுகள் காரணமாக களையிழந்து வருகிறது. தைப்பொங்கலுக்கு அடுத்த கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் கிராமங்களில் களைகட்டும். கிராம மக்கள் [மேலும்…]
மதுரையில் ‘ஜல்லிக்கட்டு ‘ துவங்கியது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ‘ஜல்லிக்கட்டு ‘ துவங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உள்ளிட்ட மதுரை மாவட்டங்களில் காளைகள் அடக்கும் போட்டிகள் [மேலும்…]
சீன ஊடக குழுமத்தின் நவ்ரு யாரென் அறிவிப்பு நிலையம் நிறுவுதல்
நவ்ரு நாட்டிலுள்ள யாரென் பகுதியில் சீன ஊடகக் குழுமத்தின் அறிவிப்பு நிலையம் ஜனவரி 15ஆம் நாள் நிறுவப்பட்டு இயங்கத் துவங்கியது. உலகளவில் சீன ஊடக [மேலும்…]




