சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்
சென்னையின் முக்கிய சாலையில் அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையின் முக்கிய சாலையான ஆர்பிஐ சாலையில் அமைந்துள்ள [மேலும்…]
ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்கப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், பிசிசிஐ-ம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இது குறித்து விசாரணை [மேலும்…]
உலகமெங்கும் எக்ஸ் தளம் முடக்கம்; தத்தளிக்கும் இணைய பயனர்கள்
எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) அதன் இணைய பதிப்பில் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது. உலகெங்கிலும் உள்ள பயனர்கள் தங்கள் கணக்குகளை அணுக முடியாமல் போன சில [மேலும்…]
அமெரிக்காவின் நிதியுதவி மசோதா பற்றிய கருத்து கணிப்பு
அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் அண்மையில் 9500 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு நிதியுதவி பற்றிய மசோதாவில் கையொப்பமிட்டார். பலரைப் பொறுத்த [மேலும்…]
அர்ஜென்டீனா, பொலிவியா மற்றும் பெரு வெளியுறவு அமைச்சர்கள் சீனப் பயணம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் அழைப்பை ஏற்று, அர்ஜென்டீனா வெளியுறவு, சர்வதேச வர்த்தகம் [மேலும்…]
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் ஏப்ரல் 26ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு [மேலும்…]
புதிய வகை டைனோசரஸ் எலும்புகள் கண்டுபிடிப்பு!
அர்ஜெண்டினாவில் தாவர உண்ணி டைனோசர் வாழ்ந்ததற்கான பற்கள் மற்றும் எழும்புத் துண்டுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அர்ஜெண்டினாவில் உள்ள தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் புதிய பள்ளதாக்கு [மேலும்…]
தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி போராட்டம்!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் குளம் போல் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிப்பட்டி காமராஜர் நகரில் தனிநபர் [மேலும்…]
மக்களவை தேர்தல் 2024 2வது கட்ட வாக்குப்பதிவு: முக்கிய போட்டியாளர்கள் யார்?
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள [மேலும்…]
பாலஸ்தீன-இஸ்ரேல் போர் நிறுத்த வேண்டும்: பொது கருத்து கணிப்பு
சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில், உலகளவில் இணையப் பயன்பாட்டாளர்களுக்கான கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. பாலஸ்தீனமும் இஸ்ரேலும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். [மேலும்…]




