சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள்
சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எத்தியோபியா ஆகிய 5 நாடுகள் ஜனவரி முதல் நாள் பிரிக்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக [மேலும்…]
7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவு.!!
7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி ,லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் [மேலும்…]
பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள்
சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எத்தியோபியா ஆகிய 5 நாடுகள் ஜனவரி முதல் நாள் பிரிக்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக [மேலும்…]
பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள்
சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எத்தியோபியா ஆகிய 5 நாடுகள் ஜனவரி முதல் நாள் பிரிக்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக [மேலும்…]
2024 சீன ஊடகக் குழும இயக்குநரின் புத்தாண்டுரை
2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷேன் ஹாய்சியுங், சி.ஜி.டி.என், சீன வானொலி நிலையம் மற்றும் இணையம் வழியாக [மேலும்…]
ரூ.1000 + ரூ.1000 = ரூ.2000.. பணம் வருகிறது….!!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. அதனைப் [மேலும்…]
1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் நாளை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை [மேலும்…]
2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயம்…!!
2024ஆம் ஆண்டில் முதல் சூரிய உதயத்தை கான குமரியில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். குமரியில் சூரிய உதயம், அஸ்தமனம் [மேலும்…]
‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!
தமிழில் ‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய [மேலும்…]
நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தின் அநேக [மேலும்…]




