சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
பிரதமர் பதவியேற்றவுடன் மத்திய அமைச்சரவையின் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்
பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்நிலையில், கிட்டத்தட்ட 30 அமைச்சர்களும் இன்று அவருடன் பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 9
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் [மேலும்…]
9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூன் 9 தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் [மேலும்…]
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு சச்சின் வாழ்த்து!
டி20 உலகக்கிரிக்கெட் போட்டியில் இன்று மோதவுள்ள இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா [மேலும்…]
பதவியேற்பதற்கு முன் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த முக்கிய தலைவர்கள்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) பல தலைவர்கள் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இன்று [மேலும்…]
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் : பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு!
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலிய பணய கைதிகளில் 4 [மேலும்…]
திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
நாகை மாவட்டம், காடம்பாடியில், திரெளபதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காடம்பாடியில் உள்ள பழைமையான திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த [மேலும்…]
இன்று நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே
இன்று நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்கிறார். ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் [மேலும்…]
ஆயிரம் ஹைக்கூ. மதிப்புரை பொன்.குமார்.சேலம்.
ஹைக்கூ மாநாடு சிறப்பு பதிவு ஆயிரம் ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி- ஒரு பார்வை- பொன்.குமார் ஹைக்கூக் கவிதையைத் தமிழுக்கு ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தவர் [மேலும்…]
பூ பல்லக்கில் எழுந்தருளி ஆகாச மாரியம்மன் வீதி உலா!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பவனி வந்த ஆகாச மாரியம்மனை ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். நாச்சியார்கோவிலில் உள்ள ஆகாச மாரியம்மன் [மேலும்…]




