சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
மே.வங்கத்தில் பாஜகவின் எழுச்சியும், மம்தாவின் வீழ்ச்சியும்!
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மூன்று கட்சிகளுமே தோல்வி அடைந்திருப்பதுதான். தமிழகம், மேற்குவங்கம், கேரளா ஆகிய [மேலும்…]
தமிழக முதல்வர் விஜய் – மநீம தலைவர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு..!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன், முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு சென்று முதல்-அமைச்சர் விஜய்யை [மேலும்…]
சீன-அமெரிக்க உறவுக்கு நிலைத்தன்மை தரும் புதிய நிலைப்பாடு
பதற்றங்களும் மாற்றங்களும் தீவிரமாக ஏற்படும் சர்வதேச நிலைமையில், சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களின் பெய்ஜிங் சந்திப்பு உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வமான [மேலும்…]
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு பற்றிய அறிமுகம்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் 13 முதல் 15ஆம் நாள் வரை சீனாவில் பயணம் [மேலும்…]
சீன-அமெரிக்க உறவின் புதிய அத்தியாயம்
அமெரிக்க அரசுத் தலைவர் டிராம்பின் சீன பயணம் குறித்து சர்வதேச செய்தி ஊடகங்கள் உயர்வாக கவனம் செலுத்தின. இப்பயணத்தின் போது இரு நாட்டு தலைவர்கள் [மேலும்…]
ரஷிய அரசுத் தலைவர் சீனாவில் அரசு முறைப் பயணம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பையேற்று, ரஷிய அரசுத் தலைவர் புதின் மே 19 மற்றும் 20ஆம் நாட்களில் சீனாவில் அரசு முறைப் பயணம் [மேலும்…]
முதலமைச்சர் விஜய் வசம் 16 துறைகள்..! புதிய அமைச்சரவையில் யாருக்கு எந்தெந்தத் துறை..?
புதிய அமைச்சரவையில் யாருக்கு எந்தெந்தத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் பின்வருமாறு: முதலமைச்சர் விஜய்:பொதுத்துறை, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் தொடர்பான [மேலும்…]
9, 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் இனி 3 மொழிகள் படிப்பது கட்டாயம்!
மத்திய கல்வி வாரியம் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் கட்டாய மும்மொழி திட்டம் ஜூலை 1 முதல் [மேலும்…]
ஜெயம் ரவியுடனான தொடர்பை நிறுத்தி கொள்கிறேன்- கெனிஷா அறிவிப்பு
கெனிஷா, ரவி மோகனுடனான தனது பிரிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சென்னை நகரத்தை விட்டு வெளியேறுகிறேன். இசை, [மேலும்…]
உதகையில் மலர் கண்காட்சி- 18ம் தேதி உள்ளூர் விடுமுறை
உதகை தாவரவியல் பூங்காவால் வருகிற 18ம் தேதி துவங்குகிறது, பிரசித்தி பெற்ற 128வது மலர் கண்காட்சி முன்னிட்டு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. [மேலும்…]




