சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
சீன-அமெரிக்க உறவு பற்றிய வாங்யீயின் கருத்து
சீன-அமெரிக்க உறவு பற்றிய வாங்யீயின் கருத்துசீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார [மேலும்…]
சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக்கான சிறப்பு நிகழ்ச்சி
சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன ஊடக குழுமமும், பிரான்ஸின் பி.எஃப்.எம் பொருளாதார தொலைக்காட்சி நிலையமும் ஜனவரி [மேலும்…]
சீன மற்றும் பிரான்ஸ் அரசுத் தலைவர்களின் வாழ்த்து செய்தி
சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரோனும் ஜனவரி [மேலும்…]
நவ்ரு வெளியுறவு அமைச்சர் சீன ஊடகக் குழுமத்துக்கு சிறப்புப் பேட்டி
சீனாவும் நவ்ருவும் தூதாண்மை உறவை மீண்டும் துவங்கும் கூட்டறிக்கையில் இரு நாடுகளும் ஜனவரி 24ஆம் நாள் கையொப்பமிட்டன. அதையடுத்து, இரு நாடுகள் தூதர் நிலைத் [மேலும்…]
இந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி
இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 26ஆம் நாள் இந்திய குடியரசு தலைவர் முர்முவுக்கு வாழ்த்து செய்தி [மேலும்…]
பாகிஸ்தானில் அதிகரிக்கும் நிமோனியா – 220 குழந்தைகள் பலி!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடந்த மூன்று வாரத்தில் மட்டும், 220 குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக [மேலும்…]
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.77 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் [மேலும்…]
ரஷ்யாவில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது
ரஷ்யாவில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. ரஷ்யாவின் பெல்கோரோட் அருகே விழுந்து நொறுங்கிய ரஷ்ய போர் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற உறுதி பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுகிறது – அண்ணாமலை
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற உறுதி பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். என் மண் என் [மேலும்…]
நடிகர் விஜயகாந்துக்கு பத்ம விபூஷன் விருது
மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசின் உயரிய [மேலும்…]




