சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
5 தொகுதிகளில் பாமக, ஒரேயொரு தொகுதியில் அமமுக முன்னிலை
அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 [மேலும்…]
வரலாறு காணாத வெற்றி -100ஐ கடந்த தவெக
சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தவெக. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 10 [மேலும்…]
மேற்கு வங்க தேர்தல் 2026: வெற்றி ஊர்வலங்களுக்குத் தேர்தல் ஆணையம் அதிரடித் தடை
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு எவ்விதக் கொண்டாட்ட ஊர்வலங்களையும் நடத்தத் தேர்தல் [மேலும்…]
சரிந்த திமுக கோட்டை; சென்னையின் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை
தமிழக சட்டசபை தேர்தல் 2026க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் சென்னையில் இதுவரை இல்லாத [மேலும்…]
வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா பின்னடைவு- திமுக வேட்பாளர் முன்னிலை
வில்லிவாக்கத்தில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா பின்னடைவை சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் பிரதான போட்டியாக களம் [மேலும்…]
கொளத்தூரில் ஸ்டாலின் பின்னடைவு- 886 வாக்குகள் பெற்று தவெக முன்னிலை
முதல் சுற்றில் கொளத்தூரில் விசில் சின்னம் முன்னிலையில் உள்ளது. முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் முதல் சுற்று முடிவில் தவெக முன்னிலையில் உள்ளது. திமுக – [மேலும்…]
தமிழக தேர்தல் முடிவுகள் 2026: பெரம்பூரில் விஜய் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
தமிழக சட்டசபை தேர்தல் 2026க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள [மேலும்…]
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2026: தபால் வாக்கு எண்ணிக்கையில் யார் முன்னிலை?
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணி [மேலும்…]
த.வெ.க 200 தொகுதிகளில் வெற்றி பெறும் – செங்கோட்டையன்..!
கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை ஒரு பக்கம் தியாகம், இன்னொரு பக்கம் மனிதநேயத்தோடு இயங்குகிற இயக்கம் [மேலும்…]




