சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
சீனாவின் சர்வதேச செல்வாக்குக்கு பாராட்டு
சர்வதேச அளவில் சீனா செல்வாக்குமிக்க நாடாகவும், வெற்றி பெற்ற நாடாகவும் திகழ்வதாக பிரான்ஸில் சிஜிடின் மற்றும் சீன ரென்மின் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் [மேலும்…]
விரைவுச்சாலை நிலச்சரிவு சம்பவத்துக்கான மீட்புதவிக்குஷிச்சின்பிங் உத்தரவு
சீனாவின் குவாங்டோங் மாநிலத்தின் மேசோ நகரில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையில் மே முதல் நாள் அதிகாலை 2:10மணியளவில், லச்சரிவு சம்பவம் ஏற்பட்டது. 2ஆம் நாள் [மேலும்…]
தொலைத் தொடர்புத்துறை உரிமதாரர்களுக்கான தொடர்பு முகாம்!
தொலைத் தொடர்புத்துறை உரிமதாரர்களுக்கான தொடர்பு முகாம் 11.05.2024 அன்று குன்னூரில் நடைபெறவுள்ளது. இந்த முகாமின் போது உரிமதாரர்கள் சரஸ் (SARAS) போர்ட்டல் மூலம் காலாண்டு [மேலும்…]
டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் கூண்டோடு நீக்கம்: டெல்லி கவர்னர் உத்தரவு
அனுமதியின்றி நியமிக்கப்பட்ட டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் லெப்டினன்ட் கவர்னரால் நீக்கப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி [மேலும்…]
ஒற்றை சிறகோடு
ஒற்றைச் சிறகோடு ! கவிஞர் இரா .இரவி ! ஒற்றைச் சிறகோடும் பறக்க முடியும் உள்ளத்தில் தன்னம்பிக்கை உரம் வேண்டும் ! இரு சிறகால் [மேலும்…]
உக்ரைன் போரில், உலகளாவிய இரசாயன ஆயுதங்கள் தடையை ரஷ்யா மீறியதா?
உக்ரேனிய துருப்புக்களுக்கு எதிராக மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் அபாயகரமான குளோரோபிரின் பயன்படுத்தியதன் மூலம், ரஷ்யா இரசாயன ஆயுதத் தடையை மீறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. [மேலும்…]
இஸ்ரேல் பிரதமர் ராஜினாமா அவசர நிலை பிரகடனம்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதனை தொடர்ந்து இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தபட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பை அழிக்கும் [மேலும்…]
புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா புஷ்பா’ [மேலும்…]
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்த குரு பகவான்!
நவகிரங்களில் சுப காரகனாக போற்றப்படும் குரு, மேஷ ராசியில் இருந்து ரிஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். நவகிரங்களில் நன்மை மட்டுமே செய்யும் சுப கிரகம் [மேலும்…]
272 இடங்களில்கூட போட்டியிடாத காங்கிரஸ் எப்படி ஆட்சி அமைக்க முடியும்!- பிரதமர் மோடி கேள்வி!
தமது மூன்றாவது பதவி காலத்தில், முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய பணிகளை ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் [மேலும்…]




