சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.கவை சேர்ந்த பிரவேஷ் வஹி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். [மேலும்…]
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: டாலருக்கு நிகராக ரூ.95.27-ஆகச் சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 30) [மேலும்…]
ரிசர்வ் வங்கியின் புதிய கிரெடிட் கார்டு விதிமுறைகள்: உங்களுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிரெடிட் கார்டு விதிமுறைகளில் ஒரு முக்கிய திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “இந்திய ரிசர்வ் வங்கி (வணிக வங்கிகள் – கிரெடிட் [மேலும்…]
கோடை வெயிலுக்கு நடுவே தமிழகத்தின் இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழை..!
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை: மேற்கு தொடர்ச்சி மலை, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான [மேலும்…]
ஆஸ்திரேலியாவில் விமான விபத்து! – இருவர் உயிரிழப்பு..!
ஆஸ்திரேலியா அடிலெய்ட் நகரில் உள்ள பாராஃபீல்ட் (Parafield) விமான நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 29, 2026) மதியம் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் [மேலும்…]
‘கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பிக் கொடுங்கள்!’:மன்னர் சார்லஸிடம் கோரிக்கை வைக்கப்போவதாக மம்தானி தெரிவித்தார்
பிரிட்டன் மன்னர் சார்லஸ் தற்போது அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி அவரிடம் வரலாற்றுச் சிறப்புமிக்க கோஹினூர் [மேலும்…]
செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி: ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்!
முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில், சுமார் 45,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் [மேலும்…]
சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது
புதன்கிழமையன்று இந்தியப் பங்குச் சந்தையில் வலுவான ஏற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் கணிசமாக உயர்ந்து நிறைவடைந்தன. சென்செக்ஸ் 609.45 புள்ளிகள் அல்லது [மேலும்…]
ஷிஆன் நகரில் உலக மேயர்கள் உரையாடல்
2026ஆம் ஆண்டு ஷிஆனில் உலக மேயர்கள் உரையாடல் நிகழ்ச்சி ஏப்ரல் 27 முதல் 29ஆம் நாள் வரை சீனாவின் ஷிஆன் நகரில் நடைபெற்றது. பட்டுப்பாதையின் [மேலும்…]
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முக்கியத்துவம் பற்றி வெளிநாட்டு ஊடகங்களின் புரிதல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதலால் பாரம்பரிய கப்பல் பயண வழியின் பாதுகாப்பு பாதிப்படையும் அபாயங்கள் அதிகரிக்கும் நிலையில், இலங்கை, அமெரிக்கா, ஸ்பெயின் [மேலும்…]




