சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
கம்போடிய மக்கள் கட்சியின் தலைவருடன் ஜாவ் லேஜி சந்திப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவருமான ஜாவ் லேஜி, 25ஆம் [மேலும்…]
வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: மத்திய அரசு உத்தரவு!
இந்தியாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு-பெருந்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நுகர்வோருக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் [மேலும்…]
வர்த்தக கவுன்சிலை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ள சீனா மற்றும் அமெரிக்கா
சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெ யாடோங் 25ஆம் நாள் கூறுகையில், சீனா-அமெரிக்கா பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்தின்படி, [மேலும்…]
வங்கதேச மக்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா வழங்குவதாக இந்தியா அறிவிப்பு
வங்கதேச குடிமக்களுக்கு இந்தியாவிற்கு வருவதற்கான சுற்றுலா விசா சேவைகளை மீண்டும் வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த அசாதாரண [மேலும்…]
“விண்வெளியில் திறந்த வெளியில் 7 மணி நேரம் ஆபத்தான போராட்டம்”
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே (International Space Station) நாசா விண்வெளி வீரர்கள் கிறிஸ் வில்லியம்ஸ் மற்றும் ஜெசிகா மேயர் ஆகியோர் வரும் ஜூன் [மேலும்…]
#JUST IN : அரசு பஸ்சில் பயணம் செய்த முதல்வர் விஜய்..!!
தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 300 புதிய பஸ்கள் சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். அதன்படி, டீசலில் இயங்கும் 164 பஸ்கள், [மேலும்…]
மின் வாரிய துறையில் மொத்தம் 65,921 காலிப் பணியிடங்கள் உள்ளன – அமைச்சர் நிர்மல்குமார்..!
மின் வாரிய வெள்ளை அறிக்கையில் பணியாளர் எண்ணிக்கை குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த பணியிடங்கள்: 1,40,635 பணியில் இருப்போர்: 74,714 காலிப்பணியிடங்கள்: 65,921 TNPDCL [மேலும்…]
Breaking: குட் நியூஸ்..! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது… அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி அறிவிப்பு..!!
தமிழக மின்சாரத்துறையின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சென்னையில் வெளியிட்டார். அந்த வெள்ளை அறிக்கையின்படி, [மேலும்…]
ஈரான் மதத் தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் பிரதமர் மோடிக்கு அதிபர் பெசெஷ்கியான் அழைப்பு எனத் தகவல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் அடக்கச் சடங்குகளில் [மேலும்…]
2026 டாவோஸ் மன்றத்தின் தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கெடுத்த லிச்சியாங்
சீன தலைமையமைச்சர் லிச்சியாங் 24ஆம் நாள் பிற்பகல் டாலியானில் 2026ம் ஆண்டு டாவோஸ் மன்றத்தின் தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் [மேலும்…]




