சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
சீன-அமெரிக்க இளைஞர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
கடலில் கூட்டுப் பயணம்:சீன-அமெரிக்க இளைஞர்களின் நட்பு பயணம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு நாட்டு மாணவர்களுக்கு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 23ம் [மேலும்…]
சீன-ஆஸ்திரியா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 55ஆவது ஆண்டு நிறைவுக்கான ஷிச்சின்பிங்கின் வாழ்த்து
சீன-ஆஸ்திரியா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 55ஆவது ஆண்டு நிறைவுக்கான ஷிச்சின்பிங்கின் வாழ்த்து
சீன-சுரிநாம் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுக்கான ஷிச்சின்பிங்கின் வாழ்த்து
சீன-சுரிநாம் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுக்கான ஷிச்சின்பிங்கின் வாழ்த்து
புதிய உயரத்தில் சீன-செர்பிய நட்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்ட செர்பிய அரசுத் தலைவர் அலெக்சாண்டர் வுசிசுடன் 25ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார். [மேலும்…]
2026 உலக ஸ்மார்ட் தொழில் பொருட்காட்சி தொடக்கம்
2026 உலக ஸ்மார்ட் தொழில் பொருட்காட்சி, மே 28ஆம் நாள் முதல் 31ஆம் நாள் வரை, தியன் சின் மாநகரில் நடைபெறுகிறது. இதில், பன்நோக்கு [மேலும்…]
பிஎஃப் கணக்கில் இருந்து 100% பணத்தையும் எடுக்க முடியுமா?
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் இருந்து யுபிஐ தொழில்நுட்பம் மூலம் நேரடியாக [மேலும்…]
கசகஸ்தானில் சாவ் லேஜீ அதிகாரப்பூர்வ பயணம்
சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர் சாவ் லேஜீ மே 25 முதல் 27ஆம் நாள் வரை கசகஸ்தானில் அதிகாரப்பூர்வ பயணம் [மேலும்…]
பெய்ஜிங்கில் 2026 வறுமை குறைப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய உயர்நிலை மன்றக் கூட்டம் நடைபெற்றது
2026ஆம் ஆண்டு வறுமை குறைப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய உயர்நிலை மன்றக் கூட்டம் மே 27ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி [மேலும்…]
தைவான் சீனாவுக்குச் சொந்தமானது:செர்பிய அரசுத் தலைவர் உறுதி
சீனாவில் மே 24 முதல் 28ஆம் நாள் வரை அரசுமுறை பயணம் மேற்கொண்டிருக்கின்ற செர்பிய அரசுத் தலைவர் வுசிச், 26ஆம் நாள் சீன ஊடக [மேலும்…]
”தள்ளிப்போகும் அதிமுகவின் ரிசல்ட்” – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரின் திடீர் ஆப்சென்ட்…. திக் திக் நிமிடங்களில் எடப்பாடி கூடாரம்….!!
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அதிமுக விவகாரத்தில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று தனது இறுதி முடிவை அறிவிப்பதாக இருந்த நிலை மாறி, [மேலும்…]




