சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
செய்தியாளர்களைச் சந்தித்த சீன-ரஷிய அரசுத் தலைவர்கள்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் ரஷிய அரசுத் தலைவர் புத்தினும் மே 20ஆம் நாள் மாலை, பெய்ஜிங்கில் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர். அப்போது [மேலும்…]
ஆட்சி திறன் குறைவான லே ஜிங்தே வட்டாரம்
லே ஜிங்தே வட்டாரம் இரு ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றது. இது குறித்து, சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனம் [மேலும்…]
தைவான் பிரதேசத் தலைவரின் உரை குறித்து சீன அரசின் பதில்
சீன அரசவைத் தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்பின்ஹூவா 20ஆம் நாள் தைவான் பிரதேச தலைவர் மே 20ஆம் நாள் வழங்கிய உரை [மேலும்…]
ஒப்பிட இயலாத அளவு நல்லாட்சி புரிக!
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 34 *** உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப் பிறர் உவமம் ஆகா! … [மேலும்…]
ஷி ச்சின்பிங்-புதின் பேச்சுவார்த்தை
சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் 20ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய அரசு தலைவர் [மேலும்…]
சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகக் கலந்தாய்வின் முதற்கட்ட முடிவு வெளியீடு
அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப், மே 13ஆம் நாள் முதல் 15ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது [மேலும்…]
அதிகாலை 4 மணிக்கு வந்த ‘பகீர்’ மெயில்; Meta-வில் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள மெட்டா நிறுவனம், அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதப் [மேலும்…]
வாட்ஸ்அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி?
வாட்ஸ்அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி? குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை, பெற்றோர்கள் தங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கே நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் புதிய வசதியைச் [மேலும்…]
10ம் வகுப்பு மறுதேர்வு எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!
சென்னை : தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் மொத்தமாக 94.31 சதவீத மாணவர்கள் [மேலும்…]
பொறியியல் சேர்க்கை – ஜூன் 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு..!
பொறியியல் சேர்க்கைக்கு ஜூன் 1- 9 வரை விளையாட்டு பிரிவுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பு (B.E/B.Tech) [மேலும்…]




