சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
திருச்சி கிழக்கில் போட்டியா? நீண்ட வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ்!
நடன இயக்குநராக தொடங்கி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ், கடந்த சில நாட்களாக தனது அரசியல் வருகை [மேலும்…]
இந்தியாவின் பல்வேறு துறைகளுடன் ஒத்துழைப்பை முன்னேற்ற விரும்புகிறது: சீனா
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோஜியாகுன் 30ஆம் நாள் சீன மற்றும் இந்திய செய்தி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குச் பதிலளித்தார். [மேலும்…]
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை – மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!
நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதியின்றி ரீல்ஸ் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்…]
துணை பொதுச்செயலாளர் பதவி ஏற்க மாட்டேன்: வேலுமணி..!
கோவையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் எஸ்பி வேலுமணி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கியதாக [மேலும்…]
தமிழக அரசு பள்ளிகளில் புதிய வரலாற்று தொடக்கம்: ஜூலை முதல் ‘மாணவர் நாடாளுமன்ற தேர்தல்’ அறிமுகம்
தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கும், மாணவ பருவத்தினருக்கும் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குறித்த புரிதல் மிக குறைவாக இருப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி [மேலும்…]
‘கடைசி 1-2 சதவீதம் மட்டுமே மீதமுள்ளது’: இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கத் தூதர்
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் உள்ளது என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் திங்களன்று அறிவித்தார். அமெரிக்க-இந்தியா [மேலும்…]
கேரளத்தில் எலிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி; 9 பேருக்கு பாதிப்பு உறுதி..!
கேரளாவில் டெங்கு, மலேரியா, ஷிகெல்லாவைத் தொடர்ந்து வேகமாகப் பரவி வருகிறது லெப்டோஸ் பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் காய்ச்சல் காரணமாக ஒரேநாளில் 11,776 பேர் [மேலும்…]
ச்சிங்காய்-சிசாங் ரயில் பாதை இயக்கத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு
2026ஆம் ஆண்டின் ஜுலை 1ஆம் நாள், ச்சிங்காய்-சிசாங் ரயில் பாதையின் இயக்கத்தின் 20ஆம் ஆண்டு நிறைவாகும். பீடபூமியில் அமைந்துள்ள இந்த உலகில் மிக உயரமான [மேலும்…]
வறுமை ஒழிப்பில் சீனாவின் சாதனைகள் குறித்து ஸ்பெயின் ஊடகக் கட்டுரை
ஸ்பெயின் மன்டோ ஒப்ரெரோ என்ற இதழ் தனது இணையத்தளத்தில், சீனாவின் முறையான மற்றும் நெடுநோக்கு தன்மையுடைய வறுமை ஒழிப்பு பணியின் சாதனைகள் என்ற கட்டுரையை [மேலும்…]
கரூர் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரூர் தொகுதி காலியானதாக [மேலும்…]




