சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
சனிக்கிழமை எண்ணெய் குளியல் வெறும் பழக்கம் இல்ல…பெரியவர்கள் சொன்ன ஆன்மீக ரகசியம்!
சனிக்கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு ஒரு தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கையும் உள்ளது. குறிப்பாக சனி பகவானுக்குரிய நாளான சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால், மனஅழுத்தம் [மேலும்…]
டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு..! இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு!
பதவி: Security Screener (Fresher) சம்பளம்: முதல் வருடம் – Rs.30,000/- இரண்டாம் வருடம் – Rs.32,000/- மூன்றாம் வருடம் – Rs.34,000/- மொத்த [மேலும்…]
அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப் சூசகம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தனது “சிறந்த நண்பர்” என்று பாராட்டியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் ஒரு வரலாற்றுச் [மேலும்…]
பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நேபாள கிரிக்கெட் வாரியம்… நடந்தது என்ன..?
நேபாளம் மற்றும் பூடான் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியின் போது, பூடான் அணியின் வீராங்கனை ஒருவர் ‘டைம்-அவுட்’ முறையில் ஆட்டமிழந்தது [மேலும்…]
தனி இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்
மக்கள் மேடை என்ற பெயரில் மக்களின் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம், “மக்கள் [மேலும்…]
மழை வரபோகுதே! சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை [மேலும்…]
ஒரே வாரத்தில் உயர்ந்த இந்தியாவின் ‘ஃபாரெக்ஸ்’ இருப்பு! டாலர் மதிப்பில் ரிசர்வ் வங்கி கொடுத்த மாஸ் அப்டேட்!
கடந்த வாரம் ஓராண்டின் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்திருந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு, தற்பொழுது மீண்டும் சரிவிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது. இந்திய ரிசர்வ் [மேலும்…]
உலக நாடுகளே மிரளும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி!
சர்வதேச அளவிலான புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் நிலையற்ற எரிசக்தி சந்தை சூழல்களுக்கு மத்தியிலும், இந்தியப் பொருளாதாரம் தனது அசுர வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக் [மேலும்…]
“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேட்டி
அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், [மேலும்…]
த.வெ.க.வின் முதல் அமைச்சரவைக் கூட்டம்!
பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ‘வெற்றித் [மேலும்…]




