சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
மே மாதத்தில் இந்தியாவின் தனியார் துறை வளர்ச்சி வேகம் குறைந்தது
இந்தியாவின் தனியார் துறை நடவடிக்கைகள் மே மாதத்தில் மந்தநிலையைக் கண்டன. இதன் விளைவாக, HSBC இந்தியா கூட்டு கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (PMI) ஏப்ரல் [மேலும்…]
FIFA உலகக்கோப்பை: இந்தியாவில் இன்னும் ஒரு டிவி-யில் கூட ஒளிபரப்பு ஒப்பந்தம் ஆகலையா?
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும் பிஃபா உலகக்கோப்பை 2026 (FIFA World Cup 2026) கால்பந்து திருவிழா ஜூன் [மேலும்…]
நாளை ஓடிடிக்கு வரும் ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ முதல் பாகத்தின் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த ‘துரந்தர்’ திரைப்படத்தின் சிறப்பு நீட்டிக்கப்பட்ட பதிப்பு (Extended Version) ஓடிடி தளத்தில் [மேலும்…]
மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் இன்று முக்கிய மன்றக் கூட்டத்தைக் கூட்டுகிறார்
பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகளுக்கான வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும், வியாழக்கிழமை மாலை 4:00 மணிக்கு அமைச்சரவையின் முக்கியக் கூட்டத்தை நடத்தவுள்ளார். [மேலும்…]
தடாலடியாக உயர்ந்த இந்திய ரூபாய்: பங்குச்சந்தை மீட்சிக்கு பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள்
இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை (மே 21) அன்று முதலீட்டாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விதமாகப் பலத்த லாபத்துடன் தங்களின் [மேலும்…]
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: புதிய 23 அமைச்சர்களின் முழு பட்டியல் வெளியீடு
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு முதன்முறையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கடந்த 10-ஆம் தேதி [மேலும்…]
வெங்காடம்பட்டி சாதனை மாணவிக்கு பாராட்டு
ஆலங்குளம். மே.22 தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்காடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி சர்மிதாவுக்கு பாராட்டுகள் குவிகிறது தேசிய திறனாய்வுத்தேர்வில் சாதனை படைத்துள்ள [மேலும்…]
“முதலில் விஜய்…. அப்புறம்தான் சாமி எல்லாம்” ஆபீஸில் மாஸ் காட்டிய எம்.எல்.ஏ ஸ்ரீநாத்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ-வும், முதலமைச்சர் விஜய் அவர்களின் மிக நெருங்கிய நண்பருமான ஸ்ரீநாத், தனது அலுவலகத்தில் செய்துள்ள ஒரு அதிரடி காரியம் இப்போது [மேலும்…]
சிங்கப்பெண் படை சிறப்பு பிரிவு ஐ.ஜி.யானார் பவானீஸ்வரி..!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடராமன், [மேலும்…]
இன்று காலை 10 மணிக்கு தமிழக அமைச்சரவை விரிவாக்கம் – கவர்னர் மாளிகை அறிவிப்பு..!
தமிழகத்தில் தவெக கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் விஜய்யுடன் சேர்த்து 10 பேர் தவெக புதிய அரசில் அமைச்சர்களாகினர். அவர்களுக்கான இலாக்காக்களும் [மேலும்…]




