சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
தமிழகத்தில் நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது வானிலை தலைகீழாக மாறத் [மேலும்…]
பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு: உலகளாவிய தீர்வுகளை வழங்கும் நாடாக இந்தியா மாற்றம்!
பிரான்ஸ் நாட்டின் நிஸ் நகரில் நடைபெற்ற பாரத் இன்னோவேட்ஸ் மாநாட்டின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். [மேலும்…]
நீட் மறுதேர்வால் தள்ளிப்போகிறதா தமிழக பொறியியல் கலந்தாய்வு? அமைச்சர் வெளியிட்ட முக்கியத் தகவல்
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை (TNEA 2026) கலந்தாய்வு தேதிகள் திட்டமிட்டபடி தொடங்காமல், சில நாட்கள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி [மேலும்…]
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ஜிகே வாசன்?
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ஜி கே வாசன் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியால் அடையாளம் காட்டப்பட்டு, பாஜகவின் தீவிர விசுவாசியாக [மேலும்…]
214 கோயில்களுக்கு அறங்காவலர் நியமன அறிவிப்பு!
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை [மேலும்…]
“தீய சக்தி திமுக கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர்”.. ப்ளூ பிரிண்ட்-ஐ ஏற்கனவே மக்கள் கிழிச்சிட்டாங்க..
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து திமுக தரப்பில் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, தவெகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் [மேலும்…]
சீன-மங்கோலிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மங்கோலிய வெளியுறவு அமைச்சர் பேட்ஜர்கல் அம்மையாருடன் ஜுன் 13ஆம் [மேலும்…]
இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!
இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவது குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனா். நேபாள தலைநகா் காத்மாண்டில் கடந்த [மேலும்…]
வரும் 17ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
வரும் 17ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் [மேலும்…]
அயதுல்லா அலி கமேனி இறுதிச்சடங்கு தேதி அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். [மேலும்…]




