சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
மைக்ரோசாப்ட் பில்ட் 2026 இன்று தொடங்குகிறது: என்ன எதிர்பார்க்கலாம்
மைக்ரோசாஃப்ட்டின் பில்ட் மாநாடு இன்று சான் பிரான்சிஸ்கோவில் தொடங்க உள்ளது. செயற்கை நுண்ணறிவை (AI) மையமாகக் கொண்ட நிறுவனமாகத் தன்னை உருமாற்றிக்கொள்ளும் தொழில்நுட்ப ஜாம்பவானுக்கு, [மேலும்…]
இந்திய விசா விதிமுறைகளில் மாற்றம்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய திருத்தங்கள்
இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தங்களின் விசா காலத்தை நீட்டிப்பதற்கான விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. ‘குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் விதிகள், [மேலும்…]
கோவை, நீலகிரி மக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை!
தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் [மேலும்…]
அதிர்ச்சியில் அறிவாலயக் கோட்டை.. திமுக கூட்டணியில் அடுத்தடுத்து விரிசல்.? காங்கிரஸ் போடும் மாஸ்டர் பிளான்.! பின்னணியில் இருக்கும் சீக்ரெட் டீல்..!!
“திமுக கூட்டணியில் அடுத்தடுத்து விரிசல்.! தவெக-வை நோக்கிப் பாயும் தோழமைக் கட்சிகள்.. ‘ தமிழக அரசியல் களம் இப்போ வேற லெவலில் சூடாகி, அறிவாலயம் [மேலும்…]
CBSE 12ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடு தொடங்கியது: ஜூன் 6-க்குள் விண்ணப்பிப்பது எப்படி?
சிபிஎஸ்இ பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு (Re-evaluation) செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பச் சாளரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே தங்களின் விடைத்தாள் நகல்களைப் [மேலும்…]
TNEA2026 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம்!
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் (BE/BTech) சேர விரும்புவோருக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2026) விண்ணப்பப் பதிவு நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை [மேலும்…]
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்க உள்ளதாகத் தகவல்!
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, விரைவில் ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டசபைத் [மேலும்…]
“திமுக தூர சக்தி… அதிமுக தீர்ந்து போன சக்தி! திமுக நம்மை எதிர்க்க எதிர்க்க… நம்மையே”- விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி [மேலும்…]
2ஆவது உலக செவ்வியல் மாநாடு கிரேக்கத்தில் துவக்கம்
2ஆவது உலக செவ்வியல் மாநாட்டுக்கான செய்தியாளர் கூட்டம் ஜூன் முதல் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. பண்டை கால ஞானங்களின் தற்கால வெளிப்பாடு என்ற தலைப்பில் [மேலும்…]
சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்திற்கான சாதனை படக் கண்காட்சி ரஷியாவில் தொடக்கம்
சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்திற்கான சாதனை தொடர்பான படக் கண்காட்சி மே 30ஆம் நாள், ரஷியாவின் இர்குட்ஸ்க் மாநிலத்தில் நடைபெற்றது. சீனப் பொருளாதாரம், [மேலும்…]




