சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
சிங்கப்பூர் தலைமை அமைச்சர் மற்றும் இலங்கை நாடாளுமன்றத் தலைவருடன் சாவ் லெஜி சந்திப்பு
சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் சாவ் லெஜி, மார்ச் 27ம் நாள், போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ம் ஆண்டு [மேலும்…]
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தின் முழு அமர்வில் உரைநிகழ்த்திய ஜாவ் லெஜி
சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் ஜாவ் லெஜி, 26ஆம் நாள் ஹைனான் மாகாணத்தில் நடைபெற்ற போ ஆவ் ஆசிய மன்றத்தின் [மேலும்…]
ஈரானுடனான பேச்சுவார்த்தை முன்னேற்றமடைந்துள்ளது: அமெரிக்கா
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ 26ஆம் நாள் பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி 7 நாடுகள் குழு வெளியுறவு அமைச்சர் கூட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாக விமான [மேலும்…]
விஜய் -திரிஷா விவகாரம் குறித்து மனந்திறந்த சமுத்திரக்கனி
நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி, தான் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சமீபத்தில் [மேலும்…]
பெங்களூர் லூலூ மால் அருகே கேஎஸ்ஆர்டிசி பேருந்து தீப்பிடித்து எரிந்தது
பெங்களூரில் பரபரப்பு மிகுந்த லூலூ மால் அருகே நேற்று நள்ளிரவில் கர்நாடக அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. [மேலும்…]
சீன-கனேட வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 26ஆம் நாளன்று அழைப்பின் பேரில், கனேடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் அம்மையாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். அப்போது [மேலும்…]
சீனாவில் ஷி ச்சின்பிங்கின் தலைமையில் வெற்றியடைந்த வறுமை ஒழிப்புப் போராட்டம் என்னும் புத்தகம்
சீனாவில் ஷி ச்சின்பிங்கின் தலைமையில் வெற்றியடைந்த வறுமை ஒழிப்புப் போராட்டம் என்னும் புத்தக வெளியீட்டுக்கான கலந்துரையாடல் கூட்டம் அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் [மேலும்…]
தங்கம் விலை ரூ.640 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (மார்ச் 27) மீண்டும் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த த.மா.கா. தலைவர் ஜிகே வாசன்..!
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, [மேலும்…]
கோடைகால விமான அட்டவணையில் 12% விமான சேவைகள் குறைப்பு
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் தங்களது கோடைகால [மேலும்…]




