சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
#BREAKING எதிர்பாரா நேரத்தில் முதல்வர் விஜய்யிடமிருந்து வந்த அதிரடி உத்தரவு- மக்கள் மகிழ்ச்சி
மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களைப் புதுப்பித்து நவீனமயமாக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 [மேலும்…]
2026 ஏபெக் இரண்டாவது உயர்நிலை அதிகாரிகள் கூட்டம் தொடக்கம்
2026ஆம் ஆண்டு ஏபெக் அமைப்பின் இரண்டாவது உயர்நிலை அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க விழா 18ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. இக்கூட்டம் இவ்வாண்டின் துவக்கம் [மேலும்…]
உள்வரும் நுகர்வை அதிகரிக்க வரித் தொகையைத் திருப்பியளிப்புகளை நடவடிக்கைகளை மேம்படுத்த சீனா அறிவிப்பு
உள்வரும் நுகர்வை அதிகரிக்க வரித் தொகையைத் திருப்பியளிப்புகளை நடவடிக்கைகளை மேம்படுத்த சீனா அறிவிப்பு உள்வரும் நுகர்வை விரிவுபடுத்தும் வகையில் பயணிகள் புறப்பாடு வரித் தொகையைத் [மேலும்…]
“அப்பாவ பத்தி யாரும் தப்பா போடாதீங்க… 20 கோடி கொடுக்காம ஏமாத்திட்டாங்க”- கே.ராஜனின் மகன்
தயாரிப்பாளர்களுக்கு கடனாக கொடுத்த ரூ.20 கோடி திருப்பித்தராததால் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். பிரபல திரைப்பட [மேலும்…]
“இருமொழி கொள்கை தான்.. முதல்வர் தெரிவித்தார்”- இந்திய மாணவர் சங்கத்தினர் பேட்டி
இரு மொழிக் கொள்கைதான் இந்த அரசின் கொள்கை என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்ததாக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கூறினர். இந்திய மாணவர் சங்கத்தினர் [மேலும்…]
அமுதா உள்ளிட்ட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக சமீரன் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார். பத்திரப் [மேலும்…]
அமெரிக்காவிடம் சிக்கிய 4 வேற்றுக்கிரக உயிரினங்கள்: சிஐஏ முன்னாள் ஆய்வாளர் அதிரடித் தகவல்
பூமியில் விழுந்து நொறுங்கிய அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளின் (UFO) இடிபாடுகளில் இருந்து, அமெரிக்க அரசாங்கம் மொத்தம் நான்கு வகையான வேற்றுக்கிரக ஏலியன் உயிரினங்களை [மேலும்…]
புதிய சாதனை! 32வது முறை எவரெஸ்ட் சிகரம் ஏறினார் காமி ரீட்டா ஷெர்பா
நேபாளத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மலை ஏறும் வீரர்களான காமி ரீட்டா ஷெர்பா மற்றும் லக்பா ஷெர்பா ஆகியோர், 2026 ஆம் ஆண்டிற்கான எவரெஸ்ட் [மேலும்…]
43 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வே சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது மே 18 முதல் 19 (2026) வரை இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக நார்வே நாட்டிற்குச் சென்றுள்ளார். [மேலும்…]
ஐபிஎல் 2026: சென்னை சேப்பாக்கம் வருகிறாரா தமிழக முதல்வர் விஜய்?
இந்தியாவில் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் ஒரு முக்கியப் போட்டியாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 18) [மேலும்…]




